யாருக்கும் நீ
மாற்று இல்லை
உனக்கு மாற்றும்
யாரும் இல்லை
அடிக்கடி அழைப்புகள்
அடுத்தொரு மடல்
வார்த்தைகளில் அன்பு
எதுவும் தேவையில்லை....
வேண்டுவதெலாம்
உன் உணர்வில்
நான் நண்பனாய்
வாழ் நாளெலாம்...!
வாழ்வில் அனைவரும் ஒரு சமயத்தில் ஒரு எல்லைக் கோட்டினைத் தாண்டியே தீர வேண்டும்! கருவிலிருந்த குழந்தை கருவறை எல்லை கடந்தால் தான் உலகைக் காண முடியும்! சில எல்லைக் கோடுகள் நம்மைக் கேட்டு வாழ்வில் நுழைவதில்லை! இதோ, நானும் ஒரு எல்லை கடந்து, தமிழ் வலைப்பூக்களின் களத்திலே காலடி வைக்கிறேன்! எத்தனைத் தெளிவாய், சிறப்பாய் இதனை எடுத்துச் செல்லவியலுமோ.. காலமே பதில் சொல்ல வேண்டும்!!!
யாருக்கும் நீ
மாற்று இல்லை
உனக்கு மாற்றும்
யாரும் இல்லை
அடிக்கடி அழைப்புகள்
அடுத்தொரு மடல்
வார்த்தைகளில் அன்பு
எதுவும் தேவையில்லை....
வேண்டுவதெலாம்
உன் உணர்வில்
நான் நண்பனாய்
வாழ் நாளெலாம்...!