வியாழன், 19 ஜூலை, 2012

புதையல்..!

சாவு கிராக்கி
கஸ்மாலம்
வீட்டிலே சொல்லிட்டு
வந்திட்டியா..

நடுரோட்டில்
உனக்கென்ன புதையலா
கிடைத்தது..!?
எந்த பூதம்
காட்டிக் கொடுத்தது..!?

அமைதியாய்..
சிந்திய புன்னகை
அருகிருந்தவரைக் கோபமூட்டியது..
மாற்றங்கள் ஒன்றும்
தெரியா உருவம் தான்..

என்னறையின்
ஒரு மூலையில்
பத்திரமாய்
ஒளிந்திருக்கும் மூன்றாம்
காலுக்குத் தெரியும்
புதையல் எங்கு
இருக்கின்றதென்று...!

கருத்துகள் இல்லை: