நெஞ்சம் சுருக்கென்றது
எல்லாம் கனவென்றது
கனவில் நடந்ததெல்லாம்
வாழ்வில் நடந்திருந்தால்...
நானும் கவிஞனல்ல
நீயும் ரசிகரல்ல...
கனவு தெளிந்தபின்னே
பகிரத் தாவிவந்தேன்
வார்த்தை தட்டவில்லை
மனது ஒப்பவில்லை
ஆசைகள் பெரிதாக...
மனதோ சிறிதாக
கனவிலேனும் வாழ்ந்துவிட
ஆசை கொண்டேன்
மனதின் உள்ளே
துடிப்பு அதிகரிக்க..
தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே...
13 கருத்துகள்:
\\நானும் கவிஞனல்ல
நீயும் ரசிகரல்ல...\\
உண்மை.
\\ஆசைகள் பெரிதாக...
மனதோ சிறிதாக\\
வரிகள் சிறியதாக
விஷயம் பெரியதாக
\\தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே...\\
சரியாக(ச்) சொன்னீர்கள் தோழா.
"கனவிலேனும் வாழ்ந்துவிட
ஆசை கொண்டேன் "
சரியாகச் சொன்னீர்கள் பல சமயம் கற்பனை தான் மகிழ்ச்சி தருகிறது.
"தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே..."
OMG தூக்கம் இல்லை என்றால் கனவுகள் ஏது?ம்ம்ம்... பகல் கனவு காணவேண்டியதுதான்.
சகோதரா,
அருமையான தலைப்புடன் சுவை(மை)யான வரி(லி)களுடன் அற்புதமான கவிதைகள் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகள் ஜமால் அண்ணா.
\\ OMG தூக்கம் இல்லை என்றால் கனவுகள் ஏது?ம்ம்ம்... பகல் கனவு காணவேண்டியதுதான். \\
சகோதரி, அதன் அர்த்தம் அதுவல்ல... :)
\\ சகோதரா,
அருமையான தலைப்புடன் சுவை(மை)யான வரி(லி)களுடன் அற்புதமான கவிதைகள் தருகிறீர்கள். வாழ்த்துக்கள். \\
ம். நன்றிகள் சகோதரி.
கனவிலேனும் வாழ்ந்துவிட
ஆசை கொண்டேன்
மனதின் உள்ளே
துடிப்பு அதிகரிக்க..
தூக்கம் இனியேது
கண்விழிப்பு வந்தபின்னே.//
அருமையான கவிதை...
வருகைக்கும், தருகைக்கும் நன்றிகள் தேவன் மாயம்.
நிறைய எழுதுங்கள் தினா!!!
காலை வணக்கம்...
காலை வணக்கம்..
நிச்சயம் செய்கிறேன் நண்பரே..
கருத்துரையிடுக